சிஎஸ்கே ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஆப்கன் வீரர்!
ஆப்கன் வீரர் நூர் அஹமது சிஎஸ்கே ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த விடியோ...
ஆப்கன் வீரர் நூர் அஹமது சிஎஸ்கே ரசிகர்களிடம் தங்களது அணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு பேசியுள்ளார்.
சிஎஸ்கே அணியில் முதல்முறையாக விளையாடும் நூர் அஹமது சிறப்பான சுழல் பந்துவிச்சாளராக இருக்கிறார்.
சேப்பாக்கில் ’ஸ்பின் டிரையோ’ எனப்படும் அஸ்வின், ஜடேஜா, நூர் அஹமது இருக்கிறார்கள். மேலும் ரச்சின் ரவீந்திராவும் அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கடந்த சீசனில் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ருதுராஜ் அந்தப் பொறுப்பை ஏற்றார்.
சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை இன்று மாலை 7.30 மணிக்கு சேப்பாக்கில் சந்திக்கிறது.
இந்நிலையில் நூர் அஹமது பேசியதாவது:
வணக்கம். அனைவருக்கும் நன்றாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஐபிஎல் என்பது நன்றாக தொடங்குவது முக்கியம்.
அதனால் உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும். போட்டியை ரசித்து பாருங்கள். சிஎஸ்கே அணிக்கு விசில் போடுங்கள் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.