முகப்பு
செய்திகள்

தோல்வியிலிருந்து தப்பிய இந்தியா: பேட்டிங்கில் சாதனை படைத்த புவனேஸ்வர் குமார்!

புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவினார்....

Updated On : 25 ஆகஸ்ட் 2017, 10:44 am IST
பகிர்:

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. ஒரு கட்டத்தில் இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்குமாரும் அபாரமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. இதுதான் 8-ஆவது விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த அதிகபட்ச ரன். புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53, தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கையின் பல்லகெலே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியா பேட் செய்வதற்கு முன்பு மழை பெய்தது. இதன்காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. இந்தியா 44.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. புவனேஸ்வர் குமார் 53, தோனி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கைத் தரப்பில் தனஞ்ஜெயா 10 ஓவர்களில் 54 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

புவனேஸ்வர் குமார் இந்தப் போட்டியில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி, தோனிக்கு நல்ல இணையாக அமைந்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். இலக்கை வெற்றிகரமாக அடைந்த போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 9-வது நிலை வீரர்களில் புவனேஸ்வர் குமார் 3-ம் இடம் பிடித்துள்ளார். 

Advertisement

Advertisement

வெற்றிகரமான சேஸிங்குகளில் அதிக ரன்கள் எடுத்த 9-ம் நிலை வீரர்கள்

2014 ஜேம்ஸ் ஃபாக்னர் vs இங்கிலாந்து: 69*
2007 தாமஸ் ஒடோயோ vs அயர்லாந்து 61*
2017 புவனேஸ்வர் குமார் vs இலங்கை 53*

* தோனியும், புவனேஸ்குமாரும் அபாரமாக ஆடி 100 ரன்கள் சேர்த்தார்கள். இதுதான் 8-ஆவது விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த அதிகபட்ச ரன். வெற்றிகரமான சேஸிங்குகளில் 8-ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்ததும் இவர்கள்தான். இதற்கு முன்பு வெற்றிகரமான சேஸிங்குகளில் 8-ஆவது விக்கெட்டுக்கு இங்கிலாந்தின் பொபாராவும் பிராடும் இந்தியாவுக்கு எதிராக 99* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பல்லகெலேவில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments