முகப்பு
செய்திகள்

பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையுடன் தோனியின் புகைப்படம்: சமூக வலைதளங்களின் 'லேட்டஸ்ட்' வைரல்!  

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் மோத உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் குழந்தையுடன்...

Updated On : 18 ஜூன் 2017, 1:03 pm IST
பகிர்:

லண்டன்: ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் மோத உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் குழந்தையுடன், இந்திய வீரர்  தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் உலகின் மிக முக்கிய  மோதல்களில் ஒன்றாக கருதப்படும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது. இன்று மாலை துவங்க உள்ள இந்த போட்டிக்காக பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரசிகர்களிடையே ஆக்ரோஷம் நிலவும் இந்த சூழலில் பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் ஆண் குழந்தையை, இந்திய வீரர் தோனி  தன் கையில் தூக்கி வைத்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

பெரும்பாலான ரசிகர்கள் ஆவளுடன் பகிர்ந்து வரும் இந்த  புகைப்படமானது தற்பொழுது சமூக வலைதளங்களில்  வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments