FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முதல் இன்னிங்ஸில் தவறவிட்ட சதத்தை 2-ஆவது இன்னிங்ஸில் அடித்த கோலி

இங்கிலாந்துடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் விராட் கோலி சதமடித்தார். 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:33 pm IST
பகிர்:

இங்கிலாந்துடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் விராட் கோலி சதமடித்தார். 

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 97 ரன்கள் எடுத்து 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. 2-ஆவது இன்னிங்ஸிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி முதலில் அரைசதம் அடித்தார்.

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் தவறவிட்ட சதத்தை இந்த இன்னிங்ஸில் அடிக்கும் நோக்கில் விளையாடி வந்த கோலி 93 ரன்கள் எடுத்திருந்த போது ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்திருப்பார். ஆனால், ஜென்னிங்ஸ் அந்த கேட்சை தவறவிட்டார். 

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட கோலி டெஸ்ட் அரங்கில் தனது 23-ஆவது சதத்தை அடித்தார். இந்த தொடரில் இது கோலியின் 2-ஆவது சதமாகும்.  

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் கோலி, சேவாக்குடன் 4-ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டார். 

அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர் - 51

ராகுல் டிராவிட் - 36

சுனில் கவாஸ்கர் - 34 

விரேந்திர சேவாக் விராட் கோலி - 23

முகமது அசாருதின் - 22

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments