தடகள வீரர் லட்சுமணனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரத்தோர்
நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் லட்சுமணன் கோவிந்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோர் வியாழக்கிழமை வழங்கினார்.
நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் லட்சுமணன் கோவிந்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோர் வியாழக்கிழமை வழங்கினார்.
ஜகார்த்தா ஆசியப் போட்டியில் தடகள வீரர் லட்சுமணன் 10000 மீ ஓட்டத்தில் இறுதிச் சுற்றில் மூன்றாவது இடத்துடன் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் ஓடுதளத்தில் இருந்து விலகி கோட்டை தாண்டியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்திய அணியின் ஆட்சேபனையை ஆசியப் போட்டிக் குழு நிராகரித்து விட்டது.
அவரது திறமையை பாராட்டும் வகையில் மத்திய விளையாட்டு அமைச்சர் ரத்தோர் வியாழக்கிழமை ரூ.10 லட்சம் நிதியை வழங்கினார். தொடர்ந்து அவர் தடகளத்தில் சிறப்பாக செயல்பட ஊக்கம் தரும் வகையில் நிதி வழங்கப்படுகிறது என ரத்தோர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.