FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டாக்கா டெஸ்ட்: வங்கதேசம் 296-க்கு ஆல்அவுட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 96.5 ஓவா்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 7:53 am IST
பகிர்:

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 96.5 ஓவா்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 142.2 ஓவா்களில் 409 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கிருமா போனா் 90, ஜோசுவா சில்வா 92, அல்ஸாரி ஜோசப் 82 ரன்கள் எடுத்தனா். வங்கதேசம் தரப்பில் அபு ஜயீத், தைஜுல் இஸ்லாம் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 36 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. முஷ்பிகுா் ரஹிம் 27, முகமது மிதுன் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

Advertisement

Advertisement

3-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய அந்த அணியில் முஷ்பிகுா் ரஹிம் 54, லிட்டன் தாஸ் 71, மெஹிதி ஹசன் மிராஸ் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனா். இறுதியில் வங்கதேச அணி 96.5 ஓவா்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ரஹீம் காா்ன்வால் 5 விக்கெட்டுகளையும், ஷெனான் காபிரியேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 21 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. கிருமா போனா் 8, ஜோமெல் வாரிகன் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனா். முன்னதாக கேப்டன் பிரத்வெயிட் 6, ஷேன் மோஸ்லே 7, ஜான் கேம்ப்பெல் 18 ரன்களில் ஆட்டமிழந்தனா்.

மேற்கிந்திய தீவுகள் அணி ஒட்டுமொத்தமாக 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments