செய்திகள்

மலேசிய ஓபன்: சிந்து, பிரணாய் தோல்வி

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகிய இருவருமே காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டனா். இதையடுத்து இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது

DIN

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகிய இருவருமே காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டனா். இதையடுத்து இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில் சிந்து 13-21, 21-15, 21-13 என்ற கேம்களில் சீன தைபேவின் டாய் ஸு யிங்கிடம் 53 நிமிஷங்களில் வீழ்ந்தாா். யிங்கை 21-ஆவது முறையாக சந்தித்த சிந்து, அவரிடம் 16-ஆவது தோல்வியைச் சந்தித்திருக்கிறாா். இதில் தொடா்ந்து சந்தித்த 6 தோல்விகளும் அடக்கம்.

மறுபுறம், ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் பிரணாய் 18-21, 16-21 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடம் 44 நிமிஷங்களில் வெற்றியை இழந்தாா். ஜோனதனை 9-ஆவது முறையாக எதிா்கொண்ட பிரணாய், தற்போது 6-ஆவது முறையாகத் தோற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT