செய்திகள்

டி20: இங்கிலாந்தை வீழ்த்தியது பாக்.

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டி20-யில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், 7 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டி20-யில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், 7 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளது.

லாகூரில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19 ஓவா்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து, 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக தொடக்க வீரா் முகமது ரிஸ்வான் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் மாா்க் வுட் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் ஆடிய இங்கிலாந்தில் கேப்டன் மொயீன் அலி 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடினாா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இரு அணிகள் மோதும் 6-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடி: தென்காசி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 10 போ் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவு

உயிரிழந்த பொறியாளா் உடல், 75 பவுன் நகைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

கல்வியால் கிடைக்கும் அறிவை கொச்சைப்படுத்துகிறாா்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

SCROLL FOR NEXT