FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாடகி ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - புகைப்படங்கள்

Updated On : 12 ஜூலை 2026, 6:28 pm IST
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என புகழப்படும் எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக மைசூரில் உள்ள அவரது இல்லத்தில் ஜூலை 11ஆம் தேதி காலமானார்.
பகிர்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். - -
தமிழில் பாடும் போது தமிழிலேயே எழுதி வைத்துக் கொண்டும், தெலுங்கில் பாடும்பொழுது தெலுங்கிலும், இந்தியில் பாடும் பொழுது இந்தியிலும், மற்ற மொழிகளில் பாடும் பொழுது தெலுங்கிலும் எழுதி வைத்துக்கொண்டு பாடுவதையே வழக்கமாக வைத்திருந்தார். - -
2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்து கல்பனகள் திரைப்படத்தில் இடம்பெற்ற, அம்மபூவினும் பாடலைப் பாடியதுடன் இனி பாடுவதில்லை என முடிவு எடுத்ததார். - -

Advertisement

Advertisement

கே.வி. மகாதேவன், எம்.எஸ். விசுவநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் வரை உள்ள பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர். - -
சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய தென்னிந்தியாவின் நைட்டிங்கேல். - -
துப்பாக்கி குண்டுகள் முழங்க மறைந்த பின்னணி பாடகி எஸ். ஜானகியின் உடலை அவரது தோட்டத்தில் உறவினர்கள் பாரம்பரிய முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களை செய்து தகனம் செய்தனர். - -
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். - -
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த பாடகி ஜானகி. - ANI
4 முறை தேசிய விருதும், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் வென்ற மறைந்த பாடகி ஜானகி. - -
தமிழில், 16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே பாடலுக்காகவும், தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடலுக்காகவும் தேசிய விருதை பெற்றார். - -
தமிழில், 16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே பாடலுக்காகவும், தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடலுக்காகவும் தேசிய விருதை பெற்றவர். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments