தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி.
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான பாரதிராஜா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஜூன் 10) காலை சென்னை நீலாங்கரையில் அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு, முதல்வர் விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
அதைத்தொடர்ந்து, பாரதிராஜாவின் விருப்பத்தின்படி, சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து நேற்றிரவு பாரதிராஜாவின் உடல் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இறுதிச்சடங்கு மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேனி, வத்தலகுண்டு அருகே காட்ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் இன்று (ஜூன் 11) பிற்பகல் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Following the transportation of the late director Bharathiraja's mortal remains to his hometown of Theni, the public has been paying their respects.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.