முகப்பு
செய்திகள்

அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?: தினேஷ் கார்த்திக்

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. 

Updated On : 13 டிசம்பர் 2022, 12:29 pm IST
பகிர்:


வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், புதன் அன்று தொடங்குகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. 

Advertisement

Advertisement

காயம் காரணமாக ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இதனால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உனாட்கட், அபிமன்யு ஈஸ்வரன், செளரப் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

டெஸ்ட் தொடர் பற்றி இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு பேட்டியில் கூறியதாவது:

அபிமன்யு ஈஸ்வரன் கடந்த சில வருடங்களாக நன்கு விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளார். அதனால் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். முதல் டெஸ்டில் 11 பேரில் ஒருவராக அவர் விளையாடப் போவதில்லை. கே.எல். ராகுலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள். இந்திய அணியின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் திறமையான வீரர், அபிமன்யு ஈஸ்வரன். பெங்காலுக்காகக் கடந்த நான்கைந்து வருடங்களாக நன்கு விளையாடி வருகிறார். 

டெஹ்ராடூனில் ஈஸ்வரனின் தந்தை சொந்த மைதானத்தில் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளார். நான் அங்குச் சென்றுள்ளேன். ஈஸ்வரனின் கடுமையான உழைப்பை நேரில் பார்த்துள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments