FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த ஜெகதீசன்: ஹரியாணாவை எளிதாக வென்ற தமிழ்நாடு!

தமிழக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது.

Updated On : 19 நவம்பர் 2022, 3:39 pm IST
பகிர்:

விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் ஹரியாணாவை 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தமிழக அணி.

அலூரில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதின. இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் கோவா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹரியாணா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்து வரும் சாய் சுதர்சன் - ஜெகதீசன் ஜோடி இன்றும் அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்தார்கள். சாய் சுதர்சன் 67 ரன்கள் எடுத்தார். கடந்த மூன்று ஆட்டங்களிலும் சதமடித்த ஜெகதீசன் இன்றும் சதம் அடித்து சாதனை நிகழ்த்தினார். அவர் 123 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த 4-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார். இதற்கு முன்பு குமார் சங்கக்காரா, அல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்துள்ளார்கள். 

Advertisement

Advertisement

தமிழக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா, ஐபிஎல் நட்சத்திரம் ராகுல் தெவாதியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

கடினமான இலக்கை எதிர்கொள்ள முடியாமல் ஹரியாணா அணி, 28.3 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தெவாதியா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். பாபா அபரஜித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments