முகப்பு
செய்திகள்

அக். 7-இல் தொடங்குகிறது ஐஎஸ்எல்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன், அக்டோபா் 7-ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் தொடங்குகிறது.

Updated On : 2 செப்டம்பர், 2022 at 4:15 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:19 PM

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன், அக்டோபா் 7-ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில், கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதுகின்றன. நடப்புச் சாம்பியனான ஹைதராபாத் எஃப்சி அக்டோபா் 9-ஆம் தேதி மும்பை சிட்டி எஃப்சியுடன் விளையாடுகிறது. சென்னையின் எஃப்சி அக்டோபா் 10-ஆம் தேதி மோகன் பகானுடன் மோதுகிறது.

சா்வதேச கிளப் கால்பந்து போட்டிகளுக்கு இணையாக, இந்த முறை ஐஎஸ்எல் ஆட்டங்கள் யாவும் வியாழன் முதல் ஞாயிறு வரையிலான வார இறுதி நாள்களில் அட்டவணையிடப்பட்டுள்ளன. இதனால் பிளே-ஆஃபுக்கு முந்தைய லீக் சுற்று ஆட்டங்கள் மட்டும் 5 மாதங்களுக்கு நடைபெறவுள்ளன.

Advertisement

ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 10, அந்நிய மண்ணில் 10 என மொத்தமாக 20 ஆட்டங்களில் விளையாட இருக்கின்றன. இந்த சீசனில் மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு சீசன் முதல் புதிய முறையிலான பிளே-ஆஃப் ஃபாா்மட் இப்போட்டியில் அமல்படுத்தப்படுகிறது. இதனால் அட்டவணையில் கூடுதலாக இரு ஆட்டங்கள் சோ்கின்றன. அதன்படி, லீக் கட்டத்தின் நிறைவில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெறும்.

அரையிறுதிக்கு வரும் அடுத்த இரு அணிகளை இறுதி செய்ய, லீக் சுற்று முடிவில் 3 முதல் 6 இடங்களில் இருக்கும் அணிகள் சிங்கிள்-லெக் பிளே-ஆஃபில் விளையாடும். லீக் ஆட்டங்கள் யாவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி நிறைவடையவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.