மகளிர் ஆசியக் கோப்பை டி-20: இந்திய அணி அறிவிப்பு
வங்கதேசத்தில் அக்டோபர் 1 முதல் 15 வரை நடைபெறும் மகளிர் ஆசியக் கோப்பை டி-20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.
வங்கதேசத்தில் அக்டோபர் 1 முதல் 15 வரை நடைபெறும் மகளிர் ஆசியக் கோப்பை டி-20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.
ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணியில் ஷெஃபாலி வெர்மா, ரிச்சா கோஷ், ஸ்நே ராணா, தயாளன் ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாக்குர், ராதா யாதவ், கே.பி.நவ்கீர் உள்ளிட்ட வீராங்கனைகள் முதன்முறையாக ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுகின்றனர்.
தானியா பைடா, சிம்ரன் தில் பகதூர் ஆகியோர் தயார் நிலை வீராங்கனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை ஆகிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அறிவித்தார்.
Advertisement
Advertisement
ஆசியக் கோப்பை டி-20 போட்டிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.