பிகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்!
ஞான்தேவ் யஷ்வந்த்ராவ் பாட்டீல் உடல்நலக் குறைவால் காலமானதைப் பற்றி..
திரிபுரா, பிகார் மற்றும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநரான ஞான்தேவ் யஷ்வந்த்ராவ் பாட்டீல் உடல்நலக் குறைவால் மேற்கு மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.
இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளர் டாக்டர் ஞான்தேவ் யஷ்வந்த்ராவ் பாட்டீல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராவர்.
1935 அக்டோபர் 22-ம் தேதி மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில பிறந்த ஞான்தேவ் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், சிவாஜி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்.
Advertisement
Advertisement
வழக்குரைஞராகப் பயிற்சி பெற்றிருந்தாம், இவரது மிகப்பெரிய பங்களிப்புநீதிமன்றங்களுக்குள் அல்ல. பாட்டீல் மகாராஷ்டிரத்தில் தனியார் உயர்கல்வியின் முன்னோடிகளில் ஒருவராகப் பரவலாகக் கருதப்படுகிறார்.
1983-இல் நிறுவிய 'டி. ஒய். பாட்டீல் குழுமம் நவி மும்பை, புணே மற்றும் கோலாப்பூர் ஆகிய இடங்களில் 160-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க விளையாட்டு மற்றும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை நிர்வகித்து வருகிறது.
Former governor of Tripura, Bihar, and West Bengal, Dnyandeo Yashwant Patil passed away on Tuesday at Kolhapur in western Maharashtra after a prolonged illness.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.