முகப்பு
செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது.

Updated On : 21 ஜூன் 2024, 3:33 pm IST
இந்திய அணி வீரர்கள் (கோப்புப் படம்)
பகிர்:

இந்திய அணி வருகிற நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் நடைபெறுவதை பிசிசிஐயும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளன.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் வருகிற நவம்பர் 8 முதல் தொடங்கவுள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தென்னாப்பிரிக்க ரசிகர்கள் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியதாவது: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே எப்போதும் வலிமையான பிணைப்பு இருக்கிறது. இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்க ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுகிறார்கள். தென்னாப்பிரிக்க வீரர்களுக்கும் இந்திய ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்றார்.

டி20 தொடர் விவரம்

முதல் டி20 போட்டி - நவம்பர் 8

2-வது டி20 போட்டி - நவம்பர் 10

3-வது டி20 போட்டி - நவம்பர் 13

4-வது டி20 போட்டி - நவம்பர் 15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments