மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி 
செய்திகள்

இது தோனியின் கடைசி ஐபிஎல் தொடரா? ஏபி டி வில்லியர்ஸ் பதில்!

DIN

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என்பது குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கே-வின் கோட்டையாகத் திகழும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றர்.

டி வில்லியர்ஸ்

இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என்பது குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் டி வில்லியர்ஸ் பேசியதாவது: கடந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெறவுள்ளார் என நிறைய வதந்திகள் பரவின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என்பது யாருக்கும் தெரியாது. அவர் முடிவே இல்லாத டீசல் என்ஜினைப் போன்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மிகச் சிறந்த வீரர். அற்புதமான கேப்டன். அவரது கேப்டன்சியில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT