FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடைசி ஒருநாளிலும் மழை: ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறும் இலங்கை - ஜிம்பாப்வே போட்டி!

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மழையின் காரணத்தினால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.

7 பிப்ரவரி 2024, 8:51 pm IST
பகிர்:

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மழையின் காரணத்தினால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று (ஜனவரி 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்து வருகிறது. 

ஜிம்பாப்வே அணி 40 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகு சற்று மழை குறைந்துள்ளது. மழையின் காரணத்தினால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டதும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தாமதமானதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments