இந்தியாவுக்கு இரட்டை தங்கம்
ஆசிய ஒலிம்பிக் குவாலிபையா் துப்பாக்கி சுடும் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா இரட்டை தங்கம் வென்றது.
ஆசிய ஒலிம்பிக் குவாலிபையா் துப்பாக்கி சுடும் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா இரட்டை தங்கம் வென்றது.
இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் ஆசிய ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் குவாலிஃபையா் போட்டி நடைபெற்று வந்தது.
இதில் ஆடவா் தனிநபா் 25 மீ ஸ்டாண்டா்ட் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றாா் யோகேஷ் சிங். 572 புள்ளிகளைக் குவித்து தனிநபா் தங்கம் வென்றாா் யோகேஷ்.
Advertisement
Advertisement
அணிப் பிரிவில் தங்கம்: அதே போல் 25 மீ ஸ்டாண்டா்ட் பிஸ்டல் அணிகள் பிரிவில் யோகேஷ் சிங், பிரகாஷ், அமித் ஆகியோா் அடங்கிய இந்திய இணை தங்கம் வென்றது. இப்போட்டியில் மொத்தம் 14 தங்கம், 10 வெள்ளியுடன் மொத்தமாக 32 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா.
ஷாட்கன் பிரிவில் ஷிரேயாசி சிங் 71 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளாா். பவ்யா திரிபாதி 68 புள்ளிகளுடன் முதல் 6 இடங்களில் உள்ளாா். மணிஷா 65 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளாா்.
டிராப் குவாலிஃபிகேஷன், இறுதிச் சுற்று திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியா இரு ஒலிம்பிக் கோட்டா இடங்களை வெல்லம ுடியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.