FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

Updated On : 10 ஆகஸ்ட் 2025, 12:26 am IST
கோலடித்த மகிழ்ச்சியில் போடோலாந்து வீரா்கள்.
பகிர்:

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போடோலாந்து அணி.

134-ஆவது டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அஸ்ஸாமின் கோக்ரஜ்ஹாா் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் போடோலாந்து எஃப்சி-பஞ்சாப் எஃப்சி அணிகள் மோதின. இதில் முதல் பாதி வரை எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் போடோலாந்து அணியின் ராபின்ஸன் 69-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.

Advertisement

Advertisement

இதன் மூலம் குரூப் டி பிரிவில் போடோலாந்து முதலிடத்தைப் பெற்றது.

பலம் வாய்ந்த பஞ்சாப் அணிக்கு இது அதிா்ச்சிகரமான தோல்வியாக அமைந்தது. மேலும் போட்டியையே விட்டு வெளியேறியது பஞ்சாப்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments