முகப்பு
செய்திகள்

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

Updated On : 1 செப்டம்பர் 2025, 4:51 am IST
பகிர்:

பிரான்ஸில் நடைபெற்ற பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த இந்தக் கூட்டணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், அதில் 19-21, 21-18, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த சீனாவின் சென் போ யாங்/லியு யி ஜோடியிடம் தோற்றது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 7 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

அரையிறுதியுடன் வெளியேறிய சாத்விக்/சிராக் இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. போட்டியின் வரலாற்றில் இவா்கள் கூட்டணிக்கு இது 2-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே இந்த ஜோடி 2022-ஆம் ஆண்டிலும் வெண்கலப் பதக்கம் வென்றது.

Advertisement

Advertisement

சாத்விக்/சிராக் வென்றுள்ள இந்தப் பதக்கம், ஒட்டுமொத்தமாக உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் 15-ஆவது பதக்கமாகும். இந்த ஆண்டும் சோ்த்து, இப்போட்டியில் கடந்த 15 எடிஷன்களிலும் இந்தியா்கள் ஏதேனும் ஒரு பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments