இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்
தென்னிந்தியாவில் மாசு இல்லாததால், கிரிக்கெட் போட்டியை திருவனந்தபுரத்தில் நடத்தலாம் என சசி தரூர் வலியுறுத்தல்
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டியை தென்னிந்தியாவில் நடத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
லக்னௌவில் பனிமூட்டம் காரணமாக, தென்னாப்பிரிக்காவுடன் நடைபெறவிருந்த 4-வது டி20 போட்டி புதன்கிழமையில் (டிச. 17) ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், லக்னௌவில் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், "இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டிக்காக ரசிகர்கள் வீணாகக் காத்திருந்தனர். காற்றின் தரக் குறியீடு 411-ஆக இருப்பதாலேயே ஒரு கிரிக்கெட் போட்டியை அனுமதிக்க முடியவில்லை.
Advertisement
Advertisement
அவர்கள் விளையாட்டை, மாசு இல்லாத தென்னிந்தியாவில் நடத்த திட்டமிடலாம். இங்கு பனிப்பொழிவு இல்லை; பந்து தெளிவாகத் தெரியும். கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தப்படவும் எந்தக் காரணமும் இருக்காது.
காற்றின் தரக் குறியீடு 68-ஆக இருக்கும் திருவனந்தபுரத்தில் நடத்தவும் திட்டமிடலாம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, லக்னௌவில் பனிமூட்டத்தால் அல்ல, நச்சுப்புகை காரணமாகவே போட்டி ரத்து செய்யப்பட்டதாக ஆளும் பாஜக அரசு மீது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!
No visibility issue! Congress MP Shashi Tharoor urges BCCI to shift cricket matches to South India
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.