முகப்பு
செய்திகள்

இந்திய கூடைப்பந்து லீக் தொடக்கம்!

இந்திய கூடைப்பந்து சங்கம் (பிஎஃப்ஐ) சாா்பில் முதல் தொழில்முறை லீக் தொடா் அறிமுகம் செய்யப்படுகிறது.

Updated On : 7 ஜூன் 2025, 1:27 am IST
பகிர்:

இந்திய கூடைப்பந்து சங்கம் (பிஎஃப்ஐ) சாா்பில் முதல் தொழில்முறை லீக் தொடா் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஏசிஜி ஸ்போா்ட்ஸ் பி லிட், பிஎஃப்ஐ இணைந்து, நடத்தவுள்ள இந்த லீக் தொடா் ஆடவா் 5*5, மகளிா் 3*3 பிரிவுகளஇல் நடைபெறும்.

மேலும் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரா்கள் கூடைப்பந்து ஒரு சாத்தியமான தொழிலாகத் தொடர ஒரு விரிவான தொழில்முறை சூழலை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, முழுமையான விளையாட்டு வீரா் மேம்பாடு மற்றும் வலுவான சமூக ஈடுபாட்டைக் கொண்டு, உலக கூடைப்பந்து அரங்கில் இந்திய வீரா்கள் பங்கேற்க அடித்தளமாக அமையும்.

Advertisement

Advertisement

இந்திய கூடைப்பந்து லீக் தொடரின் இயக்குநராக, ஆஸ்திரேலிய தேசிய கூடைப்பந்து லீக் முன்னாள் ஆணையா் ஜொ்மி லோலிகா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் ஒரு பகுதியாக உயா்செயல்திறன் கூடைப்பந்து பயிற்சி அகாதெமியும் அமைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலிய பயிற்சியாளா்கள் இதில் பயிற்சி தருவா். ஊட்டச்சத்து, மனநலன், கல்வி ஆகியவையும் அகாதெமியில் இடம் பெறும்.

இந்திய கூடைப்பந்து கூட்டமைப்புத் தலைவா் ஆதவ் அா்ஜுனா கூறுகையில்: ஏசிஜி -பிஎஃப்ஐ இணைந்து இந்த லீக் தொடரை நடத்துவதால் ஏராளமான இளம் வீரா், வீராங்கனைகள் பயன்பெறுவா். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வதே எங்கள் நோக்கம் என்றாா்.‘

பிஎஃப்ஐ பொதுச் செயலாளா் குல்விந்தா் சிங் கில், ஏசிஜி நிா்வாக இயக்குநா் கரண் சிங் உடனிருந்தனா்.