0-6, 0-6 தோல்வியால் டென்னிஸ் ராக்கெட்டை 7 முறை தரையில் அடித்த மெத்வதேவ்..! பார்வையாளர்கள் அதிர்ச்சி!
டென்னிஸ் வீரர் டேனியல் மெத்வதேவ் விரக்தியில் செய்த செயல் குறித்து...
ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் நம்.1 வீரரான டேனியல் மெத்வதேவ் (30 வயது) சிவப்பு களிமண் தரையில் முதல்முறையாக 0-6, 0-6 எனத் தோல்வியுற்றார்.
இந்த மோசமான தோல்வியினால் மெத்வதேவ் தனது டென்னிஸ் ராக்கெட்டை 7 முறை தரையில் அடித்தார். இதைப் பார்த்த பார்வையாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினார்கள்.
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் டேனியல் மெதவ்தேவ், 90ஆவது இடத்தில் இருக்கும் பெரெட்டினி மோதினார்கள்.
Advertisement
இந்தப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மெதவ்தேவ் 0-6, 0-6 என தோல்வியுற்றார். இரண்டாவது செட்டில் 0-2 என்றிருக்கும்போது மெத்வதேவ் விரக்தியில் தனது ராக்கெட்டை 7 முறை தரையில் வீசி எறிந்தார். டென்னிஸ் ராக்கெட் உடைந்து சுக்குநூறானது.
இதனால், அவருக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. 49 நிமிஷத்தில் இந்தப் போட்டி முடிவடைந்தது. முன்பாக இருவரும் சந்தித்த போட்டிகளில் மெத்வதேவ் 3 போட்டிகளிலும் வென்றிருந்தார்.
1973க்குப் பிறகு இதுவரை ஐந்து பேர் மட்டுமே டாப்10ல் இருப்பவர்களை 6-0, 6-0 என வென்றுள்ளார்கள். 2021ல் விம்பிள்டன் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பெரெட்டினி காயம் காரணமாக தரவரிசையில் 90ஆவது இடத்தில் இருக்கிறார்.
இந்தப் போட்டிதான் தனது வாழ்நாளில் சிறந்த போட்டி என பெரெட்டினி கூறியுள்ளார்.