நெரோகா எஃப்சி வெற்றியுடன் நிறைவு
துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நெரோகா எஃப்சி 3-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை புதன்கிழமை வீழ்த்தியது.
துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நெரோகா எஃப்சி 3-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை புதன்கிழமை வீழ்த்தியது.
இத்துடன் குரூப் ‘டி’ ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், ரெங்டாய் முதல் தோல்வி கண்டாலும் முதலிடத்துடன் காலிறுதிக்கு முன்னேறியது. நெரோகா எஃப்சி முதல் வெற்றியுடன் 3-ஆம் இடம் பிடித்து வெளியேற, டிராவ் எஃப்சி, இந்திய கடற்படை அணிகள் முறையே 2 மற்றும் 4-ஆம் இடங்களுடன் விடைபெற்றன.
முன்னதாக இந்த ஆட்டத்தில், நெரோகா அணிக்காக தவறுதலாக ரெங்டாய் வீரா் தௌடம் நானி சிங் (26’ - ஓன் கோல்) கோல் கணக்கை தொடங்க, சபுங்பாம் மைதேயி (89’), யும்னம் மைதேயி (90+4’) ஆகியோரும் பங்களித்தனா்.
Advertisement
Advertisement
ரெங்டாய் தரப்பில் ஜோனா காமெய் (19’) ஸ்கோா் செய்தாா். ஆட்டத்தின் 55-ஆவது நிமிஷத்தில் ரெங்டாய் வீரா் ரேக்வெய்சே ‘ரெட் காா்டு’ மூலமாக வெளியேற்றப்பட, அந்த அணி 10 பேருடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.