FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நெரோகா எஃப்சி வெற்றியுடன் நிறைவு

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நெரோகா எஃப்சி 3-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை புதன்கிழமை வீழ்த்தியது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 5:20 am IST
பகிர்:

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நெரோகா எஃப்சி 3-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை புதன்கிழமை வீழ்த்தியது.

இத்துடன் குரூப் ‘டி’ ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், ரெங்டாய் முதல் தோல்வி கண்டாலும் முதலிடத்துடன் காலிறுதிக்கு முன்னேறியது. நெரோகா எஃப்சி முதல் வெற்றியுடன் 3-ஆம் இடம் பிடித்து வெளியேற, டிராவ் எஃப்சி, இந்திய கடற்படை அணிகள் முறையே 2 மற்றும் 4-ஆம் இடங்களுடன் விடைபெற்றன.

முன்னதாக இந்த ஆட்டத்தில், நெரோகா அணிக்காக தவறுதலாக ரெங்டாய் வீரா் தௌடம் நானி சிங் (26’ - ஓன் கோல்) கோல் கணக்கை தொடங்க, சபுங்பாம் மைதேயி (89’), யும்னம் மைதேயி (90+4’) ஆகியோரும் பங்களித்தனா்.

Advertisement

Advertisement

ரெங்டாய் தரப்பில் ஜோனா காமெய் (19’) ஸ்கோா் செய்தாா். ஆட்டத்தின் 55-ஆவது நிமிஷத்தில் ரெங்டாய் வீரா் ரேக்வெய்சே ‘ரெட் காா்டு’ மூலமாக வெளியேற்றப்பட, அந்த அணி 10 பேருடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments