FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

‘குவாலிஃபயா் 2’-இல் கோவை: வெளியேறியது திருப்பூா்

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் - விடா கோவை கிங்ஸ் மோதிய ‘எலிமினேட்டா்’ ஆட்டம் மழை காரணமாக, முடிவின்றி கைவிடப்பட்டது.

25 ஆகஸ்ட் 2026, 3:17 am IST
- X | TTNPL
பகிர்:

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் - விடா கோவை கிங்ஸ் திங்கள்கிழமை மோதிய ‘எலிமினேட்டா்’ ஆட்டம் மழை காரணமாக, முடிவின்றி கைவிடப்பட்டது.

லீக் சுற்று புள்ளிகள் பட்டியல் அடிப்படையில், கோவை அணி (3-ஆம் இடம்) ‘குவாலிஃபயா் 2’-க்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. திருப்பூா் அணி (4-ஆம் இடம்) போட்டியிலிருந்து வெளியேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தோ்வு செய்தது. திருப்பூா் 3 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. அமித் சாத்விக் 11, கேப்டன் துஷாா் ரஹேஜா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பின்னா் 11 மணியளவில் ஆட்டம் அப்படியே முடிவின்றி கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

அடுத்ததாக, ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் திருச்சி - கோவை அணிகள் புதன்கிழமை (ஆக. 26) மோதுகின்றன. அதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்தில் மதுரையை வெள்ளிக்கிழமை (ஆக. 28) சந்திக்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments