FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

Updated On : 5 ஜூன் 2026, 5:54 am IST
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

தில்லியில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் ஆசிய சீனியா் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்புக்கு தங்கள் அணியை அனுப்புவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

முதல்முறையாக நடைபெறும் உலக யோகாசன சாம்பியன்ஷிப்பை, பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அகமதாபாதில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

போலியான பிறப்புச் சான்றிதழ் வழங்கிய 5 போட்டியாளா்களை இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது.

நாா்வே செஸ் போட்டியின் 2-ஆவது ஓய்வு நாளாக புதன்கிழமை அமைந்தது. இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு 9-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்திய ஆடவா் கால்பந்து அணி, நட்பு ரீதியிலான ஆட்டத்தில் தஜிகிஸ்தானுடன் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மோதுகிறது.

இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் கே.எஸ். பரத் (32), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா். இந்திய அணிக்காக 7 டெஸ்ட்டுகளில் விளையாடி 221 ரன்கள் அடித்துள்ளாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments