முதல்முறையாக கான்ஃபரன்ஸ் லீக் கோப்பை வென்ற கிறிஸ்டல் பேலஸ்!
கான்ஃபரன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் வென்ற கிறிஸ்டல் பேலஸ் அணி குறித்து...
கான்ஃபரன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணி 1-0 என ராயோ வலேக்கானோ அணியை வீழ்த்தி முதல்முறையாகக் கோப்பையை வென்றது.
ஐரோப்பாவில் நடைபெறும் மூன்றாம் தர கால்பந்து போட்டியான கான்ஃபரன்ஸ் லீக் போட்டிகள் கடந்த 2021 முதல் நடைபெறு வருகின்றன. இது சாம்பியன்ஸ் லீக் (முதல் தரம்), ஐரோப்பா லீக் (இரண்டாம் தரம்) கிற்கு அடுத்த படியாக இருக்கிறது.
இறுதிப் போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணி 50ஆவது நிமிஷத்தில் ஜீன் பிலிப் மடேடா கோல் அடித்து அசத்தினார். முதல்முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ள கிறிஸ்டல் பேலஸ் இரண்டாம் தர போட்டியான ஐரோப்பா லீக்கிற்கு முன்னேறியுள்ளது.
Advertisement
Advertisement
ஆஸ்டன் வில்லா அணி ஐரோப்பா லீக்கை வென்றது. சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி - ஆர்செனல் அணிகள் மோதவிருக்கின்றன.
இந்தப் போட்டிக்கு முன்பாக கிறிஸ்டல், ராயோ அணிகளின் ரசிகர்கள் மோதிக்கொண்டார்கள். இதில் இரண்டு காவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விவாகரத்தில் இரண்டு ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.