முகப்பு
தமிழ்நாடு

குடும்ப தகராறு காரணமாக மனைவி தீக்குளிப்பு: காப்பாற்ற சென்ற கணவன் சாவு

 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கூர்லிங்காபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(27)இவரது மனைவி பாண்டியம்மாள்(25)இருவருக்கும்

Updated On : 31 மே, 2014 at 6:47 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:58 AM

 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கூர்லிங்காபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(27)இவரது மனைவி பாண்டியம்மாள்(25)இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன.இருவருக்கும் அடிகடி குடும்பத்தகராறு ஏற்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பாண்டியம்மாளுக்கு,முத்துராஜ்க்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் வீட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.அவரை முத்துராஜ் காப்பாற்ற முயன்றார்.இதில் இருவரும் பலத்த காயமடைந்து.இருவரும் சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முத்துராஜ் மட்டும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.