குடும்ப தகராறு காரணமாக மனைவி தீக்குளிப்பு: காப்பாற்ற சென்ற கணவன் சாவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கூர்லிங்காபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(27)இவரது மனைவி பாண்டியம்மாள்(25)இருவருக்கும்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கூர்லிங்காபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(27)இவரது மனைவி பாண்டியம்மாள்(25)இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன.இருவருக்கும் அடிகடி குடும்பத்தகராறு ஏற்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பாண்டியம்மாளுக்கு,முத்துராஜ்க்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் வீட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.அவரை முத்துராஜ் காப்பாற்ற முயன்றார்.இதில் இருவரும் பலத்த காயமடைந்து.இருவரும் சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முத்துராஜ் மட்டும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.