முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் துணை முதல்வர் ஆகிறார் ஓ.பன்னீர்செல்வம்! 

அதிமுக இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 21 ஆகஸ்ட் 2017, 3:59 pm IST
பகிர்:

சென்னை: அதிமுக இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார்.

பலகட்ட காத்திருப்புகளுக்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இரு அணிகளின் இணைப்பு நிகழ்வானது, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியஇருவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இருவரும் பேசிய பிறகு கட்சி பதவிகள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இரு அணிகளின் பிரிவுக்கு முன்பு அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அதற்கு முன்னதாக இரண்டு முறைகள் என தமிழகத்தின் முதல்வராக அவர் மொத்தம் மூன்று முறைகள் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது , அவரது அமைச்சரவையில் 'நம்பர்-2' ஆக இருந்தார்.

தற்பொழுது இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு அதிமுகவில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments