FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அணிகள் இணைப்புக்கு பிந்தைய சூழல்: தில்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை 

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான இரு அதிமுக அணிகள் இணைப்புக்கு பிந்தைய சூழல் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த தில்லி வந்துள்ளதாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்

Updated On : 19 செப்டம்பர் 2017, 1:30 am IST
பகிர்:

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான இரு அதிமுக அணிகள் இணைப்புக்கு பிந்தைய சூழல் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த தில்லி வந்துள்ளதாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் கூறினார். 
மாநிலங்களவை அதிமுகஉறுப்பினர் வா.மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தில்லிக்கு திங்கள்கிழமை வந்தனர். 
இந்நிலையில், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் புது தில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடுவை நண்பகலில் சந்தித்தார். பின்னர், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியையும் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் 18 பேரை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் திங்கள்கிழமை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் 'தினமணி' நிருபரிடம் கூறியதாவது: 
குடியரசுத் துணைத் தலைவரையும், நிதியமைச்சர் ஜேட்லியையும் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சூழல்கள் குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த நான், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தில்லி வந்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments