செல்லிடப்பேசி சேவைக்கான இணைப்பு கட்டணம் குறைப்பு
செல்லிடப்பேசி அழைப்புக்கான இணைப்புப் கட்டணத்தை 14 பைசாவில் இருந்து 6 பைசாவாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) குறைத்துள்ளது. 2020-ஆம் ஆண்டில்
செல்லிடப்பேசி அழைப்புக்கான இணைப்புப் கட்டணத்தை 14 பைசாவில் இருந்து 6 பைசாவாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) குறைத்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் இருந்து இந்த கட்டணமும் இருக்காது என்றும் டிராய் கூறியுள்ளது.
செல்லிடப் பேசி சேவையில் புதிதாக நுழைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு டிராயின் இந்த நடவடிக்கை அதிக பயனளிக்கும்.
செல்லிடப்பேசி சேவை அளிக்கும் ஒரு நிறுவனம், பிற நிறுவனங்களிடம் இருந்து தனது வாடிக்கையாளருக்கு வரும் அழைப்பை இணைக்க 14 பைசாவை எதிர் நிறுவனத்திடம் இருந்து கட்டணமாக பெற்று வந்தது.
இப்போது இந்த கட்டணம் 6 பைசாவாக குறைந்துவிட்டது.
அண்மைக் காலமாக ரிலையன்ஸ் ஜியோ சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட நிலையில், இனி அந்த நிறுவனம் போட்டி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய தொகை பெருமளவில் குறையும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.