ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திங்கள்கிழமை நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திங்கள்கிழமை நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
கர்நாடக மாநிலத்தில் மழையளவு குறைந்துள்ளதால், அங்குள்ள அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை 11 மணி நிலவரப்படி நொடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. மேலும், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க 29-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.