18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் நடைபெற்ற வருகிறது.
இந்த வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் தரப்பிலும், பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த
வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரத்தின் வாதமும் நிறைவடைந்த நிலையில், தமிழக முதல்வர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி
வாதங்களை முன்வைத்து வருகிறார்.
Advertisement
Advertisement
இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராக முடியாததால் முதல்வர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி சத்தியநாராயணன் வழக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.