FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாயல்குடி அருகே ரூ.63 கோடியில் சூரிய மின் உற்பத்தி: அமைச்சர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ரூ. 63 கோடியில் அரசின் பங்களிப்புடன் நடைபெறும் சூரிய மின் உற்பத்தி திட்டப் பணிகளை

30 ஜனவரி 2024, 10:01 pm IST
மாரியூர் கிராமத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டப்பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம். சி.சம்பத். 
பகிர்:


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ரூ. 63 கோடியில் அரசின் பங்களிப்புடன் நடைபெறும் சூரிய மின் உற்பத்தி திட்டப் பணிகளை வியாழக்கிழமை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆய்வு செய்தார்.
சாயல்குடி அருகே உள்ள மாரியூரில் 268 ஏக்கர் பரப்பளவில் 10 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் எம் சி. சம்பத், வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் அதிகம் உள்ளதாலேயே இங்கு அதிகளவில் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இப்பகுதி மக்களின் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு இத்திட்டத்தை அமல்படுத்துகிறது என்றார். 
உடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன். திட்ட மேலாண்மை இயக்குநர் பி.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments