ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
ராகுல் காந்தி பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராகுல் காந்தி பாதுகாப்பு குறைபாடு குறித்து தமிழக தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.