FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மருத்துவர் ஜெயச்சந்திரனின் மறைவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

மருத்துவர் ஜெயச்சந்திரனின் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மருத்துவர் ஜெயச்சந்திரனின் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 44 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. மருத்துவர் ஜெயசந்திரனின் மரணம் ராயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராயபுரம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். 

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 48 வருடங்களாக 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரனின் இறப்பு செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதி மருத்துவசேவை ஆற்றி வாழ்ந்த அவரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் பேரிழப்பு.

Advertisement

Advertisement

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments