முகப்பு
தமிழ்நாடு

சபாநாயகர் பதவி என்றால் எவ்வளவு கஷ்டம் தெரிகிறதா?: திமுக கொறடாவைக் கிண்டல் செய்த சபாநாயகர் தனபால் 

சபாநாயகர் பதவி என்றால் எவ்வளவு கஷ்டம் தெரிகிறதா என்று திமுக கொறடா சக்கரபாணியை, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கிண்டல் செய்ததால் அவை சிரிப்பலையில் மூழ்கியது.

Updated On : 4 ஜூன் 2018, 4:40 pm IST
பகிர்:

சென்னை: சபாநாயகர் பதவி என்றால் எவ்வளவு கஷ்டம் தெரிகிறதா என்று திமுக கொறடா சக்கரபாணியை, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கிண்டல் செய்ததால் அவை சிரிப்பலையில் மூழ்கியது.

தூத்துக்குடி சமபவத்தில் தமிழக அரசைக் கண்டித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவை புறக்கணிப்பு செய்தனர். அத்துடன் தமிழக அரசுக்கு புத்தி புகட்டும் வகையில், 'மாதிரி சட்டப்பேரவை' கூட்டத்தினையும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாத இறுதியில் நடத்திக் காட்டினார்கள்.  இந்த மாதிரி சட்டப்பேரவையில் திமுக கொறடாவான சக்கரபாணி சபாநாயகராக பணியாற்றினார். 

இந்நிலையில் அவை புறக்கணிப்பைக் கைவிட்ட திமுகவினர் திங்களன்று அவைக்குத் திரும்பினர். அவையில் கேள்வி நேரத்தின் பொழுது, தனது தொகுதியில் வனச் சாலை அமைப்பது குறித்து சக்கரபாணி கேள்வியெழுப்பினார்.

Advertisement

Advertisement

அதற்கு பதில் அளித்துப் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்த் கேவிக்கு கடந்த 30-ஆம் தேதி முதல்வர் பதிலளித்து விட்டதாகவும், அப்பொழுது நீங்கள் மாதிரி சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தீர்கள் என்றும் தெரிவித்தார்.

அப்பொழுது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், 'சபாநாயகர் பதவி என்றால் எவ்வளவு கஷ்டம் தெரிகிறதா?' என்று சக்கரபாணியை நோக்கி கேள்வி எழுப்பியதால் அவை சிரிப்பலையில் மூழ்கியது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments