இப்படி ஆகி விட்டதே திமுக?: மத்திய அமைச்சர் பொன்னார் வேதனை
இப்படி ஆகி விட்டதே திமுக என்று அனைவரும் வருத்தப்படும் நிலைமையில்தான் திமுக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்னார் தெரிவித்துள்ளார்.
மண்டைக்காடு: இப்படி ஆகி விட்டதே திமுக என்று அனைவரும் வருத்தப்படும் நிலைமையில்தான் திமுக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்னார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் வெள்ளியன்று நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்தார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அதிக அளவு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. சட்டப்பேரவையைப் பொறுத்தவரை எதிர்கட்சித் தலைவர் வருவார்..பேசுவார்..வெளிநடப்பு செய்து விடுவார் என்றுதான் கூறுமாறு நிலைமை உள்ளது.
Advertisement
Advertisement
இப்படி ஆகி விட்டதே திமுக என்று அனைவரும் வருத்தப்படும் நிலைமையில்தான் திமுக தற்பொழுது இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.