பசுமை வழிச் சாலைக்கு எதிராக போராடியோர் கைது: பழ.நெடுமாறன் கண்டனம்
சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிராகப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிராகப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் இயற்கை வளங்களைக் காக்கப் போராடுவோருக்கு எதிராக அடக்குமுறைச் சட்டங்கள் ஏவப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மாணவி வளர்மதி, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் கெளதமன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.