ஃபீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மே 7-ம் தேதி காலை 8.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த அடிக்கல் நாட்டு விழா சிறப்பு யாக பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் பல்வேறு கலைநயங்கள் கொண்ட வேலைபாடுகளுடன் கூடிய நினைவு மண்டபத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. இந்த நினைவு மண்டபமானது ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.