முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மூன்று நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை 

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக மூன்று நிரந்தர நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

புது தில்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக மூன்று நிரந்தர நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் ஆர்.எம்.டி டீகா ராமன், என்.சதீஷ் குமார் மற்றும் என்.சேஷசாயீ ஆகிய மூவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

நவம்பர் 2016 -இல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிளாக நியமிக்கப்பட்ட இவர்கள் மூவரின் பதவிக்காலமானது வரும் நவம்பர் 15-ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. 

இவர்கள் மூவரின் பெயர்களும் ஒரு மனதாக கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.