முகப்பு
தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஓபிஎஸ் அறிவிப்பு 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Updated On : 19 பிப்ரவரி 2019, 5:06 pm IST
பகிர்:

சென்னை; வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் பேச்சுவார்தை நடந்து வந்தது.

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

அத்துடன் நடைபெறவுள்ள 21 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்தையின் போது பாமகவுக்கு எழு தொகுதிகள் மற்றுமொரு  மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.