ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தாதீர்கள் - ஆதித்யநாத் வேண்டுகோள்!
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு பற்றி..
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகார பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆதித்யநாத் கூறியதாவது,
அயோத்தி ராமர் கோயில் முறைகேடு விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் குறிப்பாக சமாஜ்வாதி கட்சி கடந்தகால செயல்பாடுகளை மறந்துவிட்டு, நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அரசியல் ஆக்குவதாகக் குற்றம் சாட்டி கடுமையாக விமர்சித்தார்.
Advertisement
Advertisement
அயோத்தி சம்பவம் ராமர் பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை ஒரு சுதந்திரமான அமைப்பாகும். அதன் விவகாரங்களில் தலையிட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அறக்கட்டளை விசாரணைக்குக் கோரிக்கை விடுத்ததையடுத்து, மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை வந்த உடனேயே, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கைகளுடன் தார்மீக அடிப்படையில் முன்னாள் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் ராஜிநாமா செய்துள்ளனர்.
ஆனால், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி அயோத்தி ராம ஜென்ம பூமி மற்றும் ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்துவது நியாயமற்றது என்று அவர் கூறினார்.
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Wednesday said the alleged theft of donations at the Ram temple had hurt the faith of devotees, but the opposition move to defame Ayodhya and Ram Janmabhoomi was not justified.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.