முகப்பு
தமிழ்நாடு

திருமயத்தில் வேன் - கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல்: ஏழு பேர் பலி 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேனும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் பலியாகினர். 

Updated On : 6 ஜனவரி 2019, 3:18 pm IST
பகிர்:

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேனும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் பலியாகினர்.  

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் வேன் ஒன்றில் தமிழகத்தில் உள்ள கோயில்களை தரிசனம் செய்ய வந்திருந்தனர்  அவர்கள் ஞாயிறன்று கோவில் தரிசனம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பொழுது, புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் அருகே அவர்களது வேன் விபத்துக்குளானது. 

தவறான வழியில் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அவர்களது வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருமயம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

திருமயம் போலீசார் விபத்து குறித்து விசாரணைநடத்தி வருகின்றனர் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.