திமுகவில் இணைந்தார் பாஜக துணைத் தலைவர் பி.டி.அரச குமார்
பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரச குமார் இன்று திமுகவில் இணைந்தார்.
பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரச குமார் இன்று திமுகவில் இணைந்தார்.
கடந்த ஞாயிறன்று புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன்அரசு இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில துணைத்தலைர் பி.டி.அரசகுமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அரசகுமார், 'எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின்; விரைவில் அதற்கான காலம் கனியும். ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார்' என்று புகழ்ந்து பேசினார். இது பாஜக கட்சி வட்டாரத்தில் சர்ச்சையை எழுப்பியது.
Advertisement
Advertisement
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை கோரி, கட்சித் தலைமைக்கு தமிழக பாஜக தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில் பாஜக மாநிலத் துணைத் தலைவராக இருந்த பி.டி.அரச குமார் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.