முகப்பு
தமிழ்நாடு

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது: கேஎஸ் அழகிரி

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Updated On : 9 மே 2019, 12:39 pm IST
பகிர்:

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் முடிவு ஆளுநர் முன்பு இருப்பதால் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி திருப்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தைதான் முடிவாக எடுக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆளுநர் எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம். சட்டத்திற்குட்பட்டு எது நடந்தாலும் எங்களுக்கு சம்மதமே. நீதி இவ்வாறுதான் வழங்கப்பட வேண்டும் என சிறு குழுக்கள் முடிவெடுக்கக் கூடாது. 

Advertisement

Advertisement

ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments