முகப்பு
தமிழ்நாடு

கரோனாவுக்கு வேலூரில் மேலும் ஒரு முதியவர் பலி

கரோனா தொற்று பாதிப்புக்கு வேலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 11 ஜூன் 2020, 5:52 pm IST
பகிர்:

கரோனா தொற்று பாதிப்புக்கு வேலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அஜீஜியா வீதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்து வந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து கரோனாவில் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு முதியவர் உயிரிழந்ததால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments