தமிழ்நாடு

கரோனாவுக்கு வேலூரில் மேலும் ஒரு முதியவர் பலி

கரோனா தொற்று பாதிப்புக்கு வேலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

DIN

கரோனா தொற்று பாதிப்புக்கு வேலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அஜீஜியா வீதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்து வந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து கரோனாவில் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு முதியவர் உயிரிழந்ததால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தலைமை காவலரை தாக்கியவா் கைது

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

உத்தமபாளையத்தில் பலத்த மழை!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? ஈ.ஆர்.ஈஸ்வரன்

SCROLL FOR NEXT