கம்பத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த பார்வர்டு பிளாக் கட்சியினர் 60 பேர் மீது வழக்கு
தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பார்வர்டு பிளாக் கட்சியினர் 20 பெண்கள் உள்பட 60 பேர்கள் மீது தெற்கு காவல்துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பார்வர்டு பிளாக் கட்சியினர் 20 பெண்கள் உள்பட 60 பேர்கள் மீது தெற்கு காவல்துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரச் செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வேலப்பர் கோவில் தெருவில் சாக்கடை கட்டி, ஆர்.சி.பாலம் அமைக்கக்கோரி கோஷம் போட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், தொற்று பரவும் வகையில், கூட்டம் கூடியதாகவும் 20 பெண்கள் உள்பட 60 பேர்கள் மீது, தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ப.ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தார்
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.