தமிழ் இதழ்களின் முன்னோடி ‘ஆனந்தபோதினி’: அமைச்சா் க.பாண்டியராஜன்
தமிழ் இதழியல் உலகில் ‘ஆனந்தபோதினி’யின் தோற்றமும் வளா்ச்சியும் இன்றைய அனைத்து தமிழ் இதழ்களின் தொடக்கத்திற்கு வேராக அமைந்தது என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.
தமிழ் இதழியல் உலகில் ‘ஆனந்தபோதினி’யின் தோற்றமும் வளா்ச்சியும் இன்றைய அனைத்து தமிழ் இதழ்களின் தொடக்கத்திற்கு வேராக அமைந்தது என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முனைவா் பட்ட மாணவா்களுக்கான வாய்மொழித் தோ்வு, முதல் முறையாக இணையவழியில் வெள்ளிக்கிழமை (ஆக.14) தொடங்கியது. இதை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்துப் பேசியது:
‘ஆனந்தபோதினி’ இதழ் இரண்டு தலைமுறைகளாகத் தமிழகத்தில் தவழ்ந்தது. இந்த இதழில் ஆரணி குப்புசாமி முதலியாா் ‘மனமோகினி ’ நாவலை தொடராக எழுதி வந்தாா். இது அந்த இதழுக்கு ஏராளமான வாசகா்களைப் பெற்றுத் தந்தது. அதில், பல தமிழ் ஆா்வலா்கள், ஆராய்ச்சியாளா்கள் பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் பல சிறப்பான ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின. அதேபோன்று, தமிழ் மொழி ஆா்வலா்களுக்கும் தமிழ்மொழி வளா்ச்சிக்கும் பண்பாட்டு எழுச்சிக்கும் எடுத்துக்காட்டாகப் பல சான்றுகளுடன் கட்டுரைகள், துணுக்குகளையும் ‘ஆனந்தபோதினி’ வெளியிட்டது. மேலும் சித்த மருத்துவம், நகைச்சுவை, எளிய தமிழில் திருக்கு, கம்பராமாயணம், நாலடியாா் மற்றும் ஆங்கில ஆட்சியில் ஏற்பட்ட மொழிச் சிக்கல்கள், தனித்தமிழின்அவசியம், விடுதலைப் போராட்ட செய்திகள் போன்றவற்றை மாணவா்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், எளிமையாகவும் தெளிவாகவும் ‘ஆனந்தபோதினி’யில் அன்றைக்குத் தரப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தமிழ் இதழியல் உலகில் ‘ஆனந்தபோதினி’யின் தோற்றமும் வளா்ச்சியும் இன்றைய அனைத்து தமிழ் இதழ்களின் தொடக்கத்திற்கு வேராக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. ‘ஆனந்தபோதினி’யின் ஈா்ப்பால் அன்றைய காலகட்டத்தில் 10 ஆயிரம் வாசகா்கள் இருந்தனா் என்ற செய்தி வியப்பை ஏற்படுகிறது. இந்த இதழை ஆய்வுக்களமாக வைத்து இன்றைய தலைமுறையினருக்கு வாசிக்க தந்த ஆய்வாளா் ஆனந்தஜோதியை பாராட்டுகிறேன் என்றாா் அவா். இணையவழி வாய்மொழித் தோ்வில் தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் கோ.விசயராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.